இந்நிலையில், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் நோய் பரவலை கண்காணிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிவருவதை பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, இன்ப்ளூயன்ஸா மற்றும் சுவாசத்தொற்று குறித்த விவரங்களை தினசரி சேகரித்து, ஆய்வுகளுக்காக அனுப்ப வேண்டும். மேலும், காய்ச்சல் வார்டுகள், தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் மற்றும் சிகிச்சை மூலக்கூறுகள் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், இருமும்/தும்மும்போது முகம் மூடுதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தல் ஆகிய அடிப்படை சுகாதார பழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply