கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சி பணிக்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்க திட்டமதிப்பு கேட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், இதுவரை செயல்படாத நகராட்சி ஆணையரை கண்டித்து மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு சம்மந்தமே இல்லாமல் திமுகவினர், நகராட்சி தலைவர், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் காவல் துறையிடம் பொய் புகார் அளித்து பொய் வழக்கு போட்டு உள்ளதை கண்டித்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தார். உடன் மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மற்றும் கட்சியினர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்

Leave a Reply