மாமா, மம்மி என்று அழைக்கும் காக்கா

speaking crow
Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டம் வாடா தாலுகாவின் கார்காவ் கிராமத்தைச் சேர்ந்த தனுஜா முக்னே என்பவர், சமீபத்தில் தனது தோட்டத்திற்கு சென்றபோது காயமடைந்த ஒரு காகத்தை கண்டறிந்தார். அந்த காகத்தை தன் வீட்டுக்கு அழைத்து வந்து, அன்புடன் சிகிச்சை அளித்து கவனித்தார்.
காகம் முற்றிலும் குணமடைந்த பின்னரும் அது வேறு எங்கும் செல்லாமல், தனுஜா முக்னேவின் வீட்டை சுற்றி சுற்றி பறக்கத் தொடங்கியது. சில நேரங்களில் அந்தக் காகம் நேராக அவருடைய மடியில் அமர்ந்து, அவரிடமிருந்து பாசத்தோடு உணவையும் பெறுகிறது. சமீப காலமாக, அந்தக் காகம் வீட்டில் பேசப்படும் வார்த்தைகளை கவனித்து, “காகா” (மாமா), “பாபா” (தந்தை), “மம்மி” (தாய்) போன்ற சொற்களை கூறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அசாதாரண நிகழ்வை படம் பிடித்து வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பேசும் காகத்தை நேரில் காணும் அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து வியப்பதை வெளிப்படுத்தி வருகின்றனர். இக்காகத்தின் நுண்ணறிவு மற்றும் உரையாடும் திறமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.