கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மற்றும் உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர், மாநிலங்களவை மேம்பாட்டு உறுப்பினர் திட்டத்தின் கீழ் ரூ.01.25 கோடி மதிப்பீட்டில் சாலைகிராமம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை திறந்து வைத்தனர். மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,
சாலைகிராமம் ஊராட்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பில், மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சாலைகிராமம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை, இன்று (28.07.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, இந்தியாவில் முதன்மையான முதலமைச்சராக திகழ்ந்து வருகின்றனர். மேலும், பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அரசின் நிதிநிலை நெருக்கடியை சீர் செய்து, சொன்னதைச் செய்யும் முதலமைச்சராக மட்டுமின்றி, சொல்லாத பல புதிய திட்டங்களையும் அறிவித்து, அதனையும் திறன்பட செயல்படுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை வழங்குகிறது, வருவது மட்டுமின்றி, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழும், மாநிலங்களவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியின் கீழும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நமது மாநிலங்களவை உறுப்பினர் , சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல், பள்ளிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்துதல் என கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து, மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டுக்காகநிதியின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஆக்கப்பூர்வமாக நிதியினை அளித்து பொதுமக்களை பயன்பெறச் செய்து வருகின்றனர். அதனடிப்படையில், இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட சாலைகிராமம் மேம்பட்டுதப்பட்ட அரசு சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்கும் வகையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, இப்பகுதி மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக, சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
இதுமட்டுமின்றி, இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, இன்றும் தங்களது மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு, இந்நிகழ்ச்சியின் வாயிலாக தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தரமான சுகாதார சேவைகளை பெற்று பயன்பெற வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் பேசுகையில், தமிழக முதலமைச்சர், மருத்துவத்துறையில் மகத்தான சேவையை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம், இன்று காப்போம் நம்மைக் காக்கும் 48 போன்ற மகத்தான திட்டங்களை அறிவித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், உயிர்காக்கும் மருத்துவ சேவையினை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களின் நலன்காத்து வருகிறார்கள். மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், போன்றவற்றில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களின் வசதிக்கேற்ப் பல்வேறு பிரிவுகளுக்கான கூடுதல் கட்டிடங்களும் கட்டுவதற்கான ஆணையையும், தமிழ்நாடு முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்கள். மேலும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மாவட்டம் முழுவதும் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு பயனுள்ளது வகையிலான சுகாதாரம் மற்றும் எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் மாணாக்கர்கள் தரமான கல்வி சேவையினை பெற்றிடும் பொருட்டு, ஆக்கபூர்வமான திட்டங்களுக்கென, நான் நிதியினை ஒதுக்கீடு செய்து வருகிறேன்.அதில் இந்த ஆண்டுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியில், இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட சாலை கிராமம் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையத்திற்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான கட்டிடம் தரமான முறையில் கட்டி முடிக்கப்பட்டதுஇன்றைய தினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குஅர்ப்பணிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வரும் காலங்களிலும் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய வட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் பல்வேறு பணிகள் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டது கொள்ளப் படவுள்ளது. நான்கு அரசின் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பயன்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என, மாநிலங்களை உறுப்பினர் ப. சிதம்பரம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய்சந்திரன், இளையான்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் முனியாண்டி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, சாலை கிராமம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.தங்கம், வட்டார மருத்துவ அலுவலர் ஆரண் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply