மாநிலங்களவையில் 12 காலியிடங்கள் – இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பு. செப்டம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த 12 -இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அசாம் ,பீகார் , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளுக்கும், ஹரியானா , மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , திரிபுரா , தெலுங்கானா மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களிக்கு தலா 1 தொகுதியும் என மொத்தம் 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு அன்றைய தினம் மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் 12 காலியிடங்கள் – இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பு…..

Leave a Reply