மாணவர்கள் 10 மரங்கள் நட்டால் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்- சீமான்

Spread the love

திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் பேசிய சீமான், “நான் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், ஒவ்வொரு குழந்தையும் மரம் நடவேண்டும் என சொல்வேன். அதேபோல், பள்ளி மாணவனொருவன் பத்து மரங்கள் நட்டால் அவனுக்கு தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்குவேன். 100 மரங்கள் நட்டால் ‘சிறந்த தமிழ் தேசிய குடிமகன்’ என பாராட்டு சான்று வழங்குவேன்.” என்று பேசினார்.