,

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம், முதல்வர் தீர்வு காண வேண்டும் – புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

krishnaswamy
Spread the love
கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் நீலகரி,நெல்லை, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையில் இருக்கின்றனர். நெல்லை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கபட்டவை. இவை 99 வருட குத்தகைக்காக பிபிடிசி என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழுத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இன்றுடன் வேலையை நிறுத்தி விட்டனர்.

45 நாட்களுக்குள் இருப்பிடத்தை காலி செய்ய வலியுறுத்துகின்றனர். 8700 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலம். இந்த நிர்வாகத்திற்கான ஒப்பந்தம் முடிவடைகின்றதே தவிர இதை காரணம் காட்டி வெளியேற்றுவது  எனபது சரியல்ல. 20 முதல் 30 வருடம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் தருவதாக கூறி விட்டு இப்போது 25 சதவீதம் மட்டுமே முதலில் கொடுப்பதாக சொல்லி மோசடி செய்து இருக்கின்றனர். தமிழகத்தை சார்ந்த இலங்கை மலையகத்தமிழர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு வேலை வாய்ப்பிற்காக தேயிலை தோட்டங்கள் ஏற்படுத்தபட்டது. 4,5 தலைமுறையாக இருப்பவர்களை வெளியேற சொல்வது என்பது சரியல்ல.

முதல்வர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் வாழ்வை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று பேசினார்.