,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பினை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

cm stalin
Spread the love
பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என்று   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் அப்பகுதிகளில்  சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டி தரவும் மற்றும் பழுதுபார்க்கவும் ரூ.385 கோடியும், பயிர் சேத நிவாரணமாக- ரூ.250 கோடியும், சிறு வணிகர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை சிறப்பு கடன் திட்டமும்,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.3 இலட்சம் வரை வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டமும், நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பும், சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடியும், கால்நடைகள் வாங்குவதற்கு கடன் திட்டமும், உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை ரூ.3000யும்,  பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கவும், வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கவும், வெள்ளத்தால் பழுதடைந்த வாகனங்களுக்கான காப்பீடு திட்டமும், என் மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.