தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 324 சி மாவட்டத்தின் சார்பில் 3 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. லயன்ஸ் ஆளுநர் என்.என்.ஜெயசேகரன், மாவட்ட பொருளாளர் நக்கீரன், வட்டார தலைவர் இமயம் சங்கத்தின் இளங்கோ, ஹேப்பி ஹோம் உறுப்பினர் ஹரிஷ், உடுமலை ராயல் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், சங்க உறுப்பினர்கள், 324 ஏ மாவட்ட ஆளுநர் ஃபிரான்சிஸ் ரவி, முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகன், மாவட்ட செயலாளர், லயன்ஸ் மாவட்ட உறுப்பினர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக நிவாரண பொருட்களை ஒப்படைத்தனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

Leave a Reply