கோவை மருதமலை அடிவாரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் காட்டு யானை, பராமரிப்புகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது.
கடந்த சனிக்கிழமை, மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானை அதன் குட்டியுடன் நீண்ட நேரமாக அசையாமல் நின்றுகொண்டிருந்தது குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது, யானை கடுமையான உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்திருந்தது, அதற்கருகில் அதன் குட்டி பதற்றமாக நின்றது. உடனே வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்து, ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களில் பணியாற்றும் வனக் கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்தனர்.
மருத்துவ குழு யானைக்கு தேவையான சிகிச்சையை வழங்கியதுடன், உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஞாயிறு அன்று, யானையின் உடல்நிலை சற்று மேம்பட்டது போல தெரிந்ததால் விரைவில் அது தனது குட்டியுடன் வனத்துக்குள் செல்லும் என நம்பப்பட்டது.
ஆனால், பரிதாபமாக யானையின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Leave a Reply