, ,

மனைவி கொடுமையால் உயிரை மாய்த்த ஐ.டி ஊழியர்… ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை வீடியோ வெளியிட்டு உருக்கம்

Atul-Subhash
Spread the love

விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டங்களால் பெங்களூருவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 34 வயது ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அதுல் சுபாஷ் என்பவர் அக்சஞ்சர் நிறுவனத்தில் பணி புரியும் நிகிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உண்டு. இந்த நிலையில், உத்தரபிரதேச நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கில் பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது. மாதம் 1.20 லட்சம் சம்பளம் வாங்கிய நிகிதா மாதம் 40 ஆயிரம் ஜீவானம்சமாக பெற்று வந்துள்ளார். அதோடு, மாதம் 2 லட்சம் தர வேண்டுமென்றும் செட்டில்மென்டாக 3 கோடி கேட்டும் நிகிதா தொந்தரவு செய்துள்ளார்.
இதன் காரணமாக அதுல் சுபாஷ் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. தற்கொலைக்கு முன் 24 பக்க கடிதத்தையும் எழுதியுள்ளார். சட்டம் எந்த வகையிலும் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை என்றும் தனது வீடியோவில் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளதாவது, ‘எனது உடலின் அருகில் கூட மனைவியோ அவரின் குடும்பத்தினரோ வரக் கூடாது. இந்த நாட்டு மக்கள் எனது சாவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எனது கடிதம், வீடியோக்களை மக்களை சென்றடைய வேண்டும். எனது சாம்பலை கரைக்க வேண்டாம். எனது மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், எனது சாம்பளை நீதிமன்றத்தை சுற்றியுள்ள சாக்கடையில் போடுங்கள். ‘ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.