மனிதன் உலகின் மிகச் சிறந்த படைப்பாக கருதப்பட்டாலும், வேலைசெய்யும் திறனில் சோம்பேறி என்ற விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறான். தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில் புரட்சி மற்றும் கல்வியின் வளர்ச்சியால் மனிதன் தனது வேலைகளை எளிதாக்க பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறார். இந்நிலையில், துணிகளை துவைப்பதை போல் மனிதனையும் தானாக குளிப்பாட்டி, உலர வைக்கும் வகையில் ஒரு புதிய ஏஐ (AI) இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஃபிஷியல் இனடெலிஜென்ஸ் எனப்படும் ஏஐ தொழில் நுட்பம் அறிமுகமான பிறகு பல்வேறு வேலைகள் மிக எளிதாகி விட்டன. கணினிக்கு தேவையான கட்டளைகளை கொடுத் தால், அது விரைவாகவே அந்த பணியை நிறைவு செய்கிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை வசதியாக்க பல புதிய யந்திரங்களை உருவாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், ஜப்பானை சேர்ந்த சயின்ஸ் கோ (Science Co) எனும் நிறுவனம் தற்போது மனிதனை குளிப்பாட்டும் ‘மனித வாஷிங் மெஷின்’ எனும் புதிய இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நிறுவனம் ஏற்கனவே பல்வேறு வகை
யான ரோபோக்களை உருவாக்கி உள்ளது. இப்போது, அதன் கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாக, இந்த தானியங்கி குளியல் இயந்திரமும் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மெஷின் வீடுகளிலேயே ஸ்பா அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதில் உள்ள அல்ட்ராசோனிக் அலைகள், உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் வகையில் செயல்படுகின்றன. மேலும், வாட்டர் ஜெட் தொழில்நுட்பம் மூலம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி உடலைச் சுத்தம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 50 சதவீதம் தண்ணீரை சேமிக்க முடியும் என்று நிறுவனத்தின் பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த மனித வாஷிங் மெஷின் 2030 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என சயின்ஸ் கோ நிறுவனம் அறிவித்துள்ளது. மனிதர்களின் வாழ்க்கையை மேலும் சுலபமாக்கும் நோக்கத்தில் இத்தகைய யந்திரங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மனிதனை குளிப்பாட்டும் ஏஐ வாஷிங் மெஷின் அறிமுகம்

Leave a Reply