,

மத்திய அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

dmk protest
Spread the love

பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை டாடாபாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சிவானந்த காலனி டாடாபாத் சாலையில், மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொஅ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில், எம்பி கணபதி ராஜ்குமார், தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொங்களூர் பழினிச்சாமி, மு.கண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கூறுகையில்;- மோடி 3 முறை பிரமராக பதவியேற்றும் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வர வில்லை. அதேபோல், எந்த ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை. மோடியை தமிழகம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் புறக்கணித்து விட்டது என கூறினார்.