மது விருந்து… 3 லட்சம் வீட்டு வாடகை பாக்கியா? நடிகர் கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்

ganja karupu
Spread the love

கடந்த 2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்தார்.

கஞ்சா தோட்டத்தில் வேலை செய்பவர் போல நடித்ததால் கருப்பு என்ற அவரின் பெயருடன் கஞ்சா ஒட்டிக் கொண்டது. இதை தொடர்ந்து ராம், திருடிய இதயத்தை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என பல படங்களில் நடித்தார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கஞ்சா கருப்பு, சசிக்குமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் படத்தில் மிகச்சிறப்பான வேடத்தில் நடித்திருந்தார்.

ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வந்த கஞ்சா கருப்பு தன் சினிமா வாழ்க்கையில் செய்த ஒரே தவறு காரணமாக கடனாளியாக மாறினார். கடந்த 2014-ஆம் ஆண்டு தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கொண்டு வேல் முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்தார். மகேஷ் நடிப்பில் வெளியான இந்த படத்தில் கஞ்சா கருப்பும் நடித்திருந்தார்.

ஆனால், படம் சரியாக ஓடாததால், கையில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்து கடனாளி ஆனார். தனக்கு சினிமா வாழ்க்கை கொடுத்த பாலா – அமீர் என்ற பெயரில்தான் கஞ்சா கருப்பு சொந்த வீட்டை கட்டியிருந்தார். கடனை அடைக்க அந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலைக்கு கஞ்சா கருப்பு தள்ளப்பட்டார்.

தொடர்ந்து, சென்னை வளசரவாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் கஞ்சா கருப்பு வசித்து வருகிறார் நடிகர் கஞ்சா கருப்பு. இவரின் வீட்டு உரிமையாளர் பெயர் ரமேஷ். இவர், தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தி வருகிறார். இவரது வீட்டில்தான் 4 வருடங்களாக கஞ்சா கருப்பு குடியிருந்து வந்துள்ளார். சரியாக வாடகை கொடுத்து வந்துள்ளார். வாடகை என்று கேட்கும் முன்னரே கொடுத்து விடுவாராம். வீட்டையும் தனது சொந்த வீடு போல பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டு உரிமையாளருக்கும் கஞ்சா கருப்புக்கும் ஏதோ ஒரு விஷயத்தின் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென்று மனம் மாறிய வீட்டு உரிமையாளர் கஞ்சா கருப்பை வீட்டை விட்டு வெளியேற கூறியுள்ளார்.

கஞ்சா கருப்பு வீடு தேடியும் கிடைக்காத நிலையில், படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் அவரின் வீட்டு பூட்டை உடைத்த உரிமையாளர் வீட்டிலுள்ள பொருட்களை ஓரமாக அடுக்கி வைத்து விட்டு வெள்ளையடிக்கும் வேலையை பார்த்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கோபமடைந்த கஞ்சா கருப்பு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

. மேலும் வீட்டில் தனது உடைமைகள் இருக்கும்போது தனக்கு தெரியாமல் அத்துமீறி வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வீட்டிற்கு சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் கஞ்சா கருப்பு மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர், கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.