மதுரை விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்…..!
மதுரைமாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டத்திற்கு உட்பட்ட திருவாலவாயநல்லூர், பன்னியான் மற்றும் சமயநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மை துறையுடன் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் அறக்கட்டளை சார்பாக பயிர் சாகுபடி தொழில் நுட்ப ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் நடந்த பயிற்சி முகாமிற்கு, தலைமை எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மைய தலைவர் பேராசியர் கலையரசி தலைமை தாங்கினார். திருவாலவயநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவர் சகுபர் சாதிக் முன்னிலை வகித்தார். இதில், பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள், மேம்பாடுகள், பயிர் உற்பத்தி, பாதுகாப்பு, மேலாண்மை முன்னேற்றங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் எண்ணெய் விதைகள்,நெல் ஆராய்ச்சி துறையில் விவசாயிகள் நேரடி பயிற்சி பெற்றனர். இதன் ஏற்பாடுகளை, ஜி.எச்.சி.எல். அறக்கட்டளை நிதி பங்களிப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் செய்திருந்தார்.
Leave a Reply