மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையல், அதற்கான நிதி ஆதாரம் குறித்து, ஆசிய முதலீட்டு வங்கி குழுவினர் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், அதை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சி, மாநிலத்தின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கானஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது. மதுரையில், ரூ. 8500 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்குமெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ஆய்வு செய்ய ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் இந்தியா வருகை தந்துள்ளனர். அவர்கள் நாளை(ஜூன் 3) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 4) கோவை மற்றும் மதுரையில் நேரில் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Leave a Reply