தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூர் இருந்து காணொளி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை
துறையின் மூலம் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம், மதுரைக் கல்லூரியில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், உயர் கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ( தமிழ்வழி ) மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 பெறுவற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையினை வழங்கினார். இந்நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் லத்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Leave a Reply