,

மதுரையில் உள்ள கோயில்களில் பௌர்ணமி சிறப்பு பூஜை.

பௌர்ணமி
Spread the love

மதுரை மாவட்டம் பல கோயில்களில் ஆனி பவுர்ணமி முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், ஆனி பௌர்ணமி முன்னிட்டு, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு கோயில் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதுரை அண்ணா நகர், தாசில் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், பௌர்ணமி முன்னிட்டு குபேரனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதே போல, மதுரை அண்ணா நகர் மேலமடை அருள்மிகு சௌபாக்கிய ஆலயத்தில், சிவன், மீனாட்சிக்கு, வராகி மற்றும் துர்க்கைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, அலங்காரமாகி , அர்ச்சணைகள் வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, வராகி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பெண்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.