மதுபான கடைகளை அரசு நடத்தக்கூடாது தனியார் நடத்த கோருகிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, சி.ஏ.ஜி. டாஸ்மாக் நிறுவனத்தை மேற்பார்வை செய்துள்ளது. டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும் சிரமம். அதனால் சி.ஏ.ஜி., அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அமைச்சர் துரைமுருகன் சொன்னதை சில பேர் நகைச்சுவையாக சொன்னாலும், நாங்கள் கள்ளக்குறிச்சி சென்றபோது சிலரும் அதைச் சொன்னார்கள், தண்ணீர் போல் தான் இருப்பதாகச் சொன்னார்கள். டாஸ்மாக் போதை போதவில்லை என்பதால் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கி செல்கின்றனர். டாஸ்மாக் மதுவின் தரம் ஆய்வுக்கு உட்படுத்த படுகிறதா? என்பது கேள்விக்குறிதான். அரசு வேலை செய்யவில்லை, அரசு தவறாக வேலை செய்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் ஒப்புக்கொண்டார்.
நீட் தேர்வு பொறுத்தவரை ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்க மறுக்கின்றனர்? உச்ச நீதிமன்றம் செல்ல மறுப்பது ஏன்? தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் கதவைத் தட்ட மறுக்கின்றனர். ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நாடகம் நடத்தி வருகின்றார் என தெரிவித்தார்.
Leave a Reply