மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலையின் பேச்சிலிருந்து உணர முடிகிறது ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு தேசத்தை துண்டாட இணைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனை பேசுவதில் நாட்டின் நலம். என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப்போகிறது அண்ணாமலைக்கு ஆதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்
ஜெயலலிதா மீது அவதூறு பரப்பி அண்ணாமலை,தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது. முல்லை பெரியாறு விவகாரம்,மேகேதாட்டு – காவிரி விவகாரம்,பாலாறு விவகாரம் என தமிழகத்தைச் சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணுக்கு பேராபத்து நேர உள்ளது. இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும், தங்கள் டெல்லி தலைவர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.
மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை பாஜக உணரப் போகிறதோ? என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மேலும் இன்றும் அன்னையாக நிற்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்!’, என்று அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன், ராமர் கோயில் – பாபர் மசூதி விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உரையையும், ஆடியோப் பதிவை அவர் இணைத்துள்ளார்.
Leave a Reply