கோவை மாவட்டம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்புள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தில் (சிறப்பு எண்: 422/15), பண்டிகை காலங்களில் ஒரு மதத்தினருக்கே தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக, மற்ற மதத்தினர் அதே இடத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது என ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இன்று (25.06.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி அமுதா, ஐ.ஏ.எஸ். அவர்களை இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் நேரில் சந்தித்து மனு வழங்கினார்.
அதில், அந்த நிலத்தில் அரசாங்க அலுவலகம் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் இடம்பெற்றிருந்தது.
மேலும், இதுபற்றி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் மனு வழங்கப்பட்டுள்ளதாக இயக்கம் தெரிவித்தது.
Leave a Reply