,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக நடிகர் கமல் மீண்டும் தேர்வு

kamalhassan
Spread the love

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக நடிகர் கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

நடிகர் கமல் ஹாசன், 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 16 லட்சத்திற்கும் அதிகமாக ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது.  2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் தனித்தே அக்கட்சி களமிறங்கியது. இருப்பினும் ஒரு தொகுதிகளில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. நடிகர் கமலும் கோவை தெற்கு தொகுதியில் போராடி பா.ஜ.,வின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்த கூட்டத்தில், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா தீர்மானத்தை முன்மொழிய,கட்சியின் தலைவராக கமல் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.