, , ,

மகள் மீது கை வைத்த முதியவர்… குவைத்தில் இருந்து வந்து கொன்று போட்ட தந்தை!

murder
Spread the love

ஆந்திராவின் அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர் தனது மனைவி சந்திரகலாவுடன் குவைத்தில் வேலை செய்து வரும் நிலையில், தனது 12 வயது மகள் சித்தி லட்சுமி வீட்டில் வசித்துள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் வீட்டில் சிறுமி தூங்கிக் கொண்டு இருந்தபோது லட்சுமியின் மாமனார் ஆஞ்சநேயுலு என்ற 59 வயது மாற்றுத்திறனாளி தனது பேத்தி வயதான அந்த சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். தொடர்ந்து அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்; ஆனால், சிறுமியின் சத்தம் கேட்டு உறவினர்கள் வந்துள்ளனர்.பின்னர், சிறுமிக்கு நடந்த விவரங்களை குவைத்தில் உள்ள தாய் சந்திரகலாவுக்கு உறவினர்கள் போன் செய்து கூறியுள்ளனர். உடனே, சந்திரகலா சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
ஆனால், ஆஞ்சநேயலுவை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் குவைத்திற்கு திரும்பிய சந்திரகலா நடந்த விவரத்தை கணவர் பிரசாத்திடம் கூறியுள்ளார்அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரசாத் 4 நாட்கள் விடுமுறையில் யாருக்கும் சொல்லாமல் இந்தியா வந்துள்ளார். பின்னர், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மீண்டும் குவைத் சென்று விட்டார்.
பின்னர், ஆஞ்சநேயலு எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வேண்டும் என்பதனால் குவைத்தில் இருந்து பிரசாத் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார் ,
அதில் அவர் கூறியிருப்பதாவது, பெண் பிள்ளைகள் மீது கை வைத்தால் அவரது தந்தையோ, அண்ணனோ, தம்பியால் இதுபோன்ற நிலை ஏற்படும் . பயம் தவறு செய்பவர்களுக்கு இருக்க வேண்டும் . நான் தவறு செய்தேன் அதற்குண்டான தண்டனை சட்டப்படியை நான் ஏற்கத் தயாராக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.