கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி விழா ஞானியர் தின விழாவாக கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியம் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக உலக அமைதி வேண்டி மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது.. பின்னர் குருமாதா, மீனாட்சி விநாயகம், வசந்தி விஸ்வநாதன், ஸ்ரீகலா மாதேஸ்வரன், மேகலா செங்குட்டுவன், பாரதி பாஸ்கர், சசிரேகா பாலகிருஷ்ணன், மற்றும் சகுந்தலா ஸ்ரீீஹரி ஆகியோர் அஷ்ட தீபம் ஏற்றினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவரும், உலக சமாதான அறக்கட்டளையின் அறங்காவலரும், உயிரின் சுவாசம் அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் மாதேஸ்வரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தலைமை உரை ஆற்றிய காந்தி கிராம நிகர்நிலை பல்கலை கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் பழனித்துரை , “இன்றைய சமூகம் எதையோ தேடி வேகமாக ஓடிக்கொண்டே, ஒரு வித மயக்கத்துடன் வாழ்கின்றனர். இந்த மயக்கத்தில் இருந்து விடுபட தியானம்,யோகா போன்றவற்றை மனிதனை அறிந்து கொள்வது ஒன்றே வழி” என்று பேசினார்.
மகரிஷி பரஞ்சோதியார் தமது அருளுரையில் , “தனிமனித அமைதி தான் உலக அமைதிக்கு அடிப்படை. எங்கு அமைதி நிலவுகிறதோ, அங்கு கடவுள் உள்ளார். எங்கு கடவுள் உள்ளாரோ, அங்கே தான் அமைதி நிலவும்.ஓர் இறை ஓர் இனம் என ஒன்று பட்ட ஞானமும் அரசியலும் ஒன்றுபட்டால் அன்றே உலக சமாதானம்” என்றார்.
நிகழ்ச்சியில்,பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஜெனிவாவில் உள்ள சிரியா ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.ராஜா ஆறுமுகம், உலக சமாதான அறக்கட்டளையின் பொது செயலாளர் சுந்தர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சமாதான அறக்கட்டளையின் பொது செயலாளர் சுந்தர் ராமன் மற்றும் அறங்காவலர் டாக்டர் மாதேஸ்வரன் ஆகியோர், போதை பொருட்களில். இருந்து விடுபட இளம் தலைமுறையினரிடம் தியானம்,யோகா விழிப்புணர்வு தேவை எனவும்,எனவே இளைய சமுதாயத்தினருக்கு ஞானிகளின் வாழ்வியலை மையமாக கொண்ட புரிதல்களை கொண்டு சேர்ப்பது தற்போது அவசியம் என தெரிவித்தனர்.
போதை பொருட்களில் இருந்து விடுபட இளம் தலைமுறையினரிடம் தியானம்,யோகா விழிப்புணர்வு தேவை கோவையில் நடைபெற்ற பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டோர் பேச்சு

Leave a Reply