,

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

bus strike
Spread the love

ஜனவரி 19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் மாற்று ஓட்டுநர்களை வைத்து அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், 100 சதவீத பேருந்துகளை இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.  இந்த நிலையில், ஜனவரி 19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஜனவரி 19ம் நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஜனவரி 20ம் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம் நடைபெறும் என் அண்ணா தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.