, ,

பொள்ளாச்சி தொகுதியில் முதல் முறையாக தாமரை மலருமா….?

pollachi
Spread the love
ஆ.வெ.மாணிக்கவாசகம்
 பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிகமான கிராமங்களை உள்ளடக்கியது.
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி),உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
1977-ம் ஆண்டு முதல் 2004-ம்  ஆண்டு வரை தனித் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி தொகுதி  சீரமைக்கப்பட்டு 2009-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜி.ஆர். தாமோதரன் வெற்றி பெற்றார் . 1957-ல் பி.ஆர். ராம கிருஷ்ணன் காங்கிரஸ், 1962-ம் வருடம் சி சுப்ரமணியம் காங்கிரஸ்  சார்பில் நின்று வெற்றி பெற்றனர்.
1967-ல் திமுக முதல் முறையாக களம் கண்டு நாராயணன் என்பவர் வெற்றியை ஈட்டினார்.
1971-ம் ஆண்டு தேர்தலில் நாராயணனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதே ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் எம். காளிங்கராயன் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
1977-ம் ஆண்டு முதல் முறையாக அதிமுக சார்பில் கே.ஏ. ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்றார் . 1980-ம் ஆண்டு திமுக சார்பில் சிடி தண்டபாணி பாராளுமன்றத்திற்கு சென்றார்.
தொடர்ந்து 1984, 89, 91 ஆண்டுகளில் முறையை அதிமுக சார்பில் ஆர் அண்ணாநம்பி, டாக்டர் ராஜா ரவி வர்மா வென்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வி. கந்தசாமி 1996லும்,98-ல் எம் தியாகராஜன் அதிமுக சார்பிலும் வெற்றி பெற்றனர்.
1999,2004 ஆண்டுகளில் மதிமுக சார்பில்  சி. கிருஷ்ணன் இரு முறை வெற்றி பெற்றார்.
2009-ம் ஆண்டு பொதுத்தொகுதியான பின்பு  மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டினார்.
அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் கே. சுகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2014-ம் ஆண்டு அதிமுக சார்பில் சி .மகேந்திரன் ,2019ஆம் ஆண்டு திமுக சார்பில் கு. சண்முகசுந்தரம் ஆகியோர் வெற்றி  பெற்றனர்.
காங்கிரஸ் 4 முறையும், திமுக 5 முறையும் ,அதிமுக 7 முறையும், மதிமுக இரண்டு முறையும்  வெற்றி பெற்ற இந்த தொகுதியில், 7 லட்சத்து 66 ஆயிரத்து 77 ஆண் வாக்காளர்களும் ,
8 லட்சத்து 15 ஆயிரத்து 428 பெண் வாக்காளர்களும், 290 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம்
15 லட்சத்து 81 ஆயிரத்து  795 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி முழுவதும் 706 வாக்கு மையங்களில், ஆயிரத்து  701 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய பிரதான கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 3 கட்சிகளின் சார்பில் இளம் வேட்பாளர்களே களம் இறக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் கார்த்திக் அப்புசாமி என்கின்ற கார்த்திகேயன் போட்டியிடுகிறார்.
கட்சியினர் மத்தியில் நன்கு அறிமுகமானவர் என்றாலும்,பொது மக்களுக்கு இவர் அறிமுகம் இல்லாதவர். அடிப்படையில் பொள்ளாச்சி தொகுதி அதிமுகவிற்கு செல்வாக்கு உள்ள பகுதியாகும்.
திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வர சாமி,   2007 – ம் ஆண்டு திமுகவில் பல பதவிகளை வகித்தவர்.
தற்போது மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராகவும், மடத்துக்குளம் ஒன்றியக் குழு துணை தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
“எனக்கு வாய்ப்பு வழங்கிய கோபாலபுரம் குடும்பத்துக்கு, நானும் என் குடும்பமும் அடிமையாகவும், நன்றிக்கடன் செலுத்துபவர்களாக இருப்போம். கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றி பெறுவேன் “என நம்பிக்கையுடன்  கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது க. வசந்த ராஜன்   தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர். பிருந்தாவனம் கல்வி குழும தாளாளராக உள்ளவர்.சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான,
வசந்த ராஜன் கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக உள்ளார்.
கட்சி நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தி பொதுமக்களுக்கு நன்கு பரிட்சயம் உள்ளவர்.
கிராமங்களை அதிகமாக கொண்ட பொள்ளாச்சி தொகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு கிராமங்களில் அதிக அளவில் உள்ளது. மாற்றத்தை விரும்பும் நடுநிலையாளர்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற கருத்தும் அதிகரித்து வருகிறது .