,

பொள்ளாச்சியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

meeting
Spread the love

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆலோசனைப்படி,  வருகின்ற 01.02.2014, வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் திராவிட  முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பட்டியல் இன மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியதன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும் இந்த நிகழ்வில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் குறித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டமும் பொள்ளாச்சி நகர கழக செயலாளர் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வி கிருஷ்ணகுமார்  தலைமையில் ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.சுப்ரமணியம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி.ஆர்.கே.குருசாமி மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா வடுகை கனகு மா.சுந்தரம் அருணாச்சலம் மார்ட்டின், தினேஷ், ராஜ்கபூர்,சரோஜினி, தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்ட்னர்.