பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வெப்பக் காற்று பலூன் திருவிழா வெளிநாடுகளில் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொள்ளாச்சி பகுதியில் பறக்க விடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாடுகளிலிருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த வெப்பக்காற்று பலூன்கள் பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்திலிருந்து வானில் பறக்க விடப்பட்டன.
வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூன்கள், அதற்கென பிரத்தியேக பைலெட்டுகளை கொண்டு வானில் பொள்ளாச்சியைச் சுற்றி பறக்க விடப்படுகின்றன.
நரி, புலி, மிக்கி மவுஸ் உருவத்திலான பலூன்கள் குழந்தைகளைக் கவர்ந்தன.
பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா

Leave a Reply