,

பொள்ளாச்சியில் அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

udhayanidhi stalin
Spread the love
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமி ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், மக்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள், மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும், பொள்ளாச்சியில் கூடுதல் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் கொள்முதல் செய்யப்படும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய பரிசீலனை செய்யப்படும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெட்ரோல், டீசல், விலையை குறைக்கப்படும், அண்டை மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பது திராவிட மாடல் ஆட்சி என்றும், தரமான காலை உணவுதிட்டம், கல்வி கொடுத்து வருவது திராவிட மாடல் அரசு என்றும், கோவை மாவட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் பேசினார்.