நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவையில் உள்ள புகழ்பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
செவ்வந்தி, ரோஜா, அருகம்புல் போன்ற மலர்களால் செய்யப்பட்ட மாலைகள் மற்றும் சந்தனக் காப்பு அணிவிக்கப்பட்டு, விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் சிரமமின்றி வழிபடுவதற்காக கோவில் நிர்வாகம் தடுப்புகளை அமைத்து, காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஆசியாவில் உயரமான ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலை அமைந்துள்ள கோவிலாகிய புலியகுளம் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரமும், 190 டன் எடையுமுடையதாகும்.



Leave a Reply