கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன். மகள் கீர்த்தனா (வயது 21) இவர் கோவை கற்பகம் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி எஸ் .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்,வாரத்தில் சனி ,ஞாயிறு அவரது பெற்றோர் வீட்டுக்கு செல்வார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் புரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார் .நேற்று காலையில் கீர்த்தனா எழுந்திருக்கவில்லைஅவரை உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்துதந்தை தியாகராஜன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகிறார்.புரோட்டா சாப்பிட்டு மருத்துவ கல்லூரி மாணவி இறந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply