புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா கோலாகலம்

Spread the love

கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு ஆடம்பர தேர் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடைபெற்றது. இதற்கு கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமை தாங்கினார். இந்த தேர் பவனியானது ஆலய வளாகத்தில் தொடங்கி புலியகுளம் பகுதியை சுற்றி நடைபெற்றது. இதில், வேளாங்கண்ணி தேர், அன்னை தெரசா தேர், குழந்தை ஏசு தேர், சூசையப்பர் தேர், அந்தோணியார் தேர் உள்ளிட்ட 13 தேர்கள் வண்ண விளக்குகள் ஒளிர வரிசையாக பவனி வந்தது.

கொட்டும் மழையிலும் பக்தர்கள் ஆர்வமுடன் தேருடன் பவனி வந்தனர்.