மத்திய அரசு இன்று (ஜுலை 1 ) இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இவற்றை இன்று முதல் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகம் முன்பு உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருச்சி மாவட்டம் மணப்பாறை, திண்டுக்கல், கும்பகோணம் ஆகியப் பகுதிகளிலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply