,

பீளமேட்டில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

n karthik
Spread the love

கோவை பீளமேடு பகுதி-1 திமுக சார்பில், பீளமேடு அவினாசி சாலை, பி.எஸ்.ஜி  கல்லூரி அருகில்  அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர்,இளநீர், பழவகைகளை வழங்கினார். பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், வழக்கறிஞர் மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.