கோவை மதுக்கரை பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் யோகாசனம் செய்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பாஜக நிர்வாகி வசந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது எஸ்.பி வேலுமணி பள்ளி மாணவ மாணவிகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறும்போது: உலகம் முழுவதும் 190 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பிரதமர் மோடி துவங்கி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். அதேபோல் தமிழ்நாட்டிலும் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, இதனை எங்கள் பொதுச்செயலாளர் வலியுறுத்துவார். காரணம் மனதளவு அமைதியாக இருக்கும், நோய் தொற்றில் இருந்து விடுபடலாம். போதை கலாச்சாரத்தில் இருந்து விடுபட யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல் அனைத்து வயதினரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
போதை கலாச்சாரத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என எங்களது பொதுச்செயலாளர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதிமுக ஆட்சியில் 2021 வரை போதை பொருட்கள் புழக்கம் ஆகியவை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அன்று காவல்துறை கடுமையான நடவடிக்கையில் எடுத்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் அதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். 2026ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரும்போது இந்த போதை கலாச்சாரம் முழுமையாக தடுக்கப்படும் என தெரிவித்தார்.
Leave a Reply