பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து பின்னர் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து, நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளார்:
“25 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கும், அரசியல் சாசனத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் நிலைநிறுத்தும் அர்ப்பணிப்பிற்கும் சான்றாகும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



Leave a Reply