ipl-லில் இந்த ஆண்டு இரண்டு புதிய விதிகள் அமல்

Spread the love

வரவிருக்கும் ஐபிஎல் 2024 தொடரில் 70 லீக் போட்டிகள் மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனை தொடர்ந்து மே 20 ஆம் தேதி குவாலிபையர்-1, மே 21 ஆம் தேதி எலிமினேட்டர், மே 23 ஆம் தேதி குவாலிபையர்-2, மற்றும் மே 25 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் இரண்டு புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது, பவுலர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தலாம் என்ற பிசிசிஐ-யின் அனுமதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கிரிக்கெட்டில் பந்தை ஸ்விங் செய்ய உமிழ்நீர் தேய்த்து கிரிப் செய்வது பவுலர்கள் இடையே பழக்கமாக இருந்தது. கொரோனா காலத்தில் இதற்கு ஐசிசி தடை விதித்தது, பின்னர் அதை நிரந்தரமாக மாற்றியது. ஆனால், பல பவுலர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஐபிஎல் போட்டிகளில் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இரண்டாவது, மாலை நேர போட்டிகளில் “இரண்டாவது பந்து” விதி அறிமுகமாக உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் பவுலர்களுக்கு பனியின் தாக்கம் காரணமாக பந்தை கிரிப் செய்ய முடியாத நிலை உருவாகிறது. இதனால், பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதகம் ஏற்பட்டதால், ரன்கள் அதிகமாகும் நிலை காணப்படுகிறது. இதை தவிர்க்க, 11வது ஓவருக்குப் பிறகு பந்தை மாற்ற முடியுமா என்பதை நடுவர்கள் முடிவு செய்யுவர். இது பனி அதிகமாக உள்ள நேரங்களில் மட்டும் நடைமுறைக்கு வரும்.

ஆனால், பகல்நேர போட்டிகளில் (மாலை 3:30 மணி தொடங்கும் போட்டிகள்) இரண்டாவது பந்து விதி பயன்படுத்தப்படாது, ஏனெனில் பகல்பொழுதில் பனி ஒரு பிரச்சனையாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.