பார்க் கல்வி குழுமத்தின் இறுதியாண்டு பொறியியல் பட்டதாரி மாணவர்கள் 650 பேருக்கு அவர்களுக்கான வேலை வாய்ப்பு கடிதம் விநியோகிக்கும் விழா “லான்ச்பாட் 2025” என்ற தலைப்பில், கல்வி குழுமத்தின் கணியூர் வளாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 650 மாணவர்களுக்கு முறையாக பெறப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
வேலை வாய்ப்பு ஆண்டு அறிக்கையை பார்க் கல்வி குழுமத்தின் வேலைவாய்ப்பு இயக்குநர் டாக்டர் எம். பிரின்ஸ் வழங்கினார். பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் (தகவல் தொழில்நுட்பம், 2002-2006), அமெரிக்காவின் எமர்ஜெர் டெக்னாலஜிஸின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கௌரி சங்கர் விஸ்வநாதன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உற்சாகமான உரையை நிகழ்த்தினார்.
அவர் தனது உல களாவிய தொழில்முனைவோர் பயணத்தின் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார், மேலும் மாணவர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்க முயற்சிக்க ஊக்குவித்தார்.
பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, மாணவர்களைப் பாராட்டி மேலும் வாழ்வில் வரும் வாய்ப்புகளைத் பற்றிக் கொண்டு முன்னேறும்படி அவர்களை ஊக்குவித்தார். இறுதியாண்டு ஐ. டி. மாணவர் ஹரிஷ் கண்ணனின் நன்றி உரை வழங்கினார்.
பார்க் கல்வி குழுமங்கள் சார்பில் 650 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கடிதம் வழங்கும் விழா

Leave a Reply