பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பக்கத்தில் சமீபத்தில் ஏற்பட்ட உள்கட்சிச் சச்சரவில், கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கட்சி அலுவலக முகவரியை மாற்றியுள்ளார்.
புதிய படிவத்தில், சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள அன்புமணியின் வீட்டுமுகவரி கட்சி அலுவலக முகவரியாக இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வசிக்கும் திண்டிவனம் தைலாபுரம் இல்ல முகவரி பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், அன்புமணி மற்றும் அவரது தந்தையான டாக்டர் ராமதாஸ் இடையேயான முறுகல் இன்னும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியை கடுமையாக விமர்சித்து, கட்சிக்குள் மற்றும் குடும்பத்தில் நிகழும் சிக்கல்களை வெளிக்கொணர்ந்தார்.
இளைஞரணித் தலைவர் பதவியை முகுந்தனுக்கு வழங்கும் விவகாரத்தில், தாயாரை அன்புமணி தாக்கியதாகவும், பாஜக கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த வரிசையில், அன்புமணியின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்களை, கட்சிப் பொறுப்பிலிருந்து ராமதாஸ் நீக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply