நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2007ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார்.
மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன என தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலை அழைத்து தனது முடிவைக் கூறியதாக சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க விருப்பமில்லை என்றும் சரத்குமார் தேசியத்திற்கு தேவைப்படுகிறார் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Leave a Reply