மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர்(பரப்புரை) பதவி வகித்து வந்த அனுஷா ரவி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு அவர் அளித்துள்ள் ராஜினாமா கடிதத்தில், “தேர்தல் அரசியலில் (Electoral Politics) மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.” குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
Leave a Reply