சம்பா ரவை மற்றும் அரிசி மாவுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 6 மடங்கு அதிகமான ரசாயனம் கலந்து இருப்பதாக கோவையில் நடைப்பெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாம் அதிகம் பயன்படுத்தும் சம்பா ரவை, அரிசி மாவு உள்பட பல்வேறு உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. உணவு பொருட்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு கெட்டுவிடும். ஆனால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கின்றன.
இதற்காக அதிக அளவில் ரசாயன பொருட்களை கலப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த உணவு பொருட்களை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த உணவு பொருட்களில், 2020-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ரசாயன பொருளான குளோர்பைரி
போஸ் என்ற ரசாயனம் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த ரசாயனம், 0.01 என்ற அளவில் மட்டுமே உணவு பொருட்களில் இருக்க வேண்டும். ஆனால் 0.0604 வரை கலக்கப்பட்டுள்ளது. இது கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் உள்ள சில கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ரசாயன பொருள் அதிகமாக கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து சம்பா ரவை, வெள்ளை ரவை, மைதா மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாக்கெட் உணவு பொருட்கள் வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த உணவு பொருட்களை அங்குள்ள அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. அதில், அவை மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றவை என்பது தெரியவந்தது. உடனே அந்த உணவு பொருட்களை திருப்பி அனுப்பி விட்டனர்.
ஆனால் இங்குள்ள அதிகாரிகள் அதே உணவு பொருட்களை ஆய்வு செய்தபோது, அதில் ரசாயனம் கலந்து இருப்பதை கண்டறிய முடியவில்லை. எனினும் வேறொரு ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்தபோதுதான், அந்த உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக குளோர் பைரிபோஸ் என்ற ரசாயனத்தை கலந்து இருப்பது தெரியவந்தது.
பொதுவாக பாக்கெட்டு களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் 16 முறைகளில் சோதனை செய்யப்படும். இந்த சம்பவத்துக்கு பிறகு 61 முறை சோதனை செய்கிறார்கள்.
இப்படி சமீபத்தில் கோவையில் நடத்திய ஆய்வில்தான், பாக்கெட் உணவு பொருட்களில் அந்த ரசாயனம் கலந்து இருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆய்வு அறிக்கையை ஏனோ உணவு பாதுகாப்பு துறை வெளியிடவில்லை. எனவே, மக்களிடம் உண்மையை தெரிவித்து, அவர்களது உடல் நலன் காக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி தமிழ்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியபோது:
நீண்ட நாட்கள் உணவுப்பொருள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு ரசாயனம் நிர்ணயிக்கப்பட்ட அளவு சேர்க்கப்படுகிறது பரிந்துரைக்கப்பட்டதற்கு மேல் ரசாயனம் சேர்த்தால் அது உடல் நலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது இத்தகைய உணவை சாப்பிடுவதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை உடல்நிலை பாதிக்கும் என டாக்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாக்கெட் உணவு பொருட்களை பெற்று ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவை தற்போது அறிவிக்க இயலாது. ஏனென்றால் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவு குறித்து சம்பந்தப்பட்ட உணவு தயாரிப்பு நிறுவனங்கள் வேறு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய முறையீடு செய்யலாம். அதற்கு 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது. இதனால் தற்போது நாங்கள் எடுத்த பரிசோதனை முடிவை அறிவிக்க இயலாத நிலை இருக்கிறது. அவ்வாறு முறையீடு செய்தால் வெளிமாநிலங்களில் அந்த உணவு பொருளை ஆய்வுக்காக அனுப்பி வைப்போம். அதில் ‘ரிப்போர்ட் அன் சேப்’ என்று வந்தால் அந்த உணவு பொருட்கள் தடை செய்யப்படும். ‘கன்பார்ம்டு ஸ்டண்டர்டு’ என்று வந்தால் அந்த உணவு பொருட்கள் தரமானது. தற்போது சில நிறுவனங்கள் தயாரித்த குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட பொருட்களை திரும்ப பெறவும், ஏற்கெனவே தயாரித்து ஸ்டாக் வைத்து இருந்தால் அவற்றை வெளியே கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் உணவு பொருட்கள் நீண்டநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கதான் ரசாயனம் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
இந்த உணவுகளை சாப்பிடுவது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்தை மோச மாக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கோவை மளிகை வியாபாரிகள் கருத்து
உலக அளவில் 1988 ஆம் ஆண்டு குளூர் பிரிபோஸ் தடை செய்யப்பட்டது செடிக்கு இந்த மருந்தை அடிக்கக் கூடாது என தெரிவித்தது ஆனால் இந்த மருந்தின் வீரியத்தை உணர்ந்த மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு தடையை அமுல்படுத்தியது உணவுப் பொருள்கள் மாவு மாதிரியானவற்றில் இம்மருந்தை கலந்தால் தெரிந்துவிடும் என்பதால் தண்ணீரில் ஊற வைத்து உடைக்கப்படும் அரிசி கோதுமை சம்பா ரவை போன்றவற்றில் ஊறவைக்கும் போதே கலந்து விடுகிறார்கள். சுமார் 8 மணி நேரம் ஊறிய பின்பு, கோதுமை சம்பா அரிசியில் இவை முழுமையாக உரிஞ்சப்படுகிறது.இவைகளை அரைக்கும் போது கோதுமை சம்பா அரிசியில் முழுமையாக ரசயனம் தங்கிவிடுகிறது.
தோலை உரித்து எடுத்த பின்பும் இந்த ரசாயன மருந்து அப்படியே தங்கி விடுகிறது. அடைக்கப்படும் உணவுப் பொருட்கள் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை போன்றவற்றில் இந்த ரசாயனத்தின் காரணமாக பூச்சிகள் வருவதில்லை. பாக்கெட்டை கத்திரித்தவுடன், பொல, பொலவென மாவு எளிதாக கொட்டுகிறது. இதுவே மக்கள் மனது மயங்க காரணமாகிறது. அன்று அரைத்த மாவு எப்படி இருக்குமோ அது போல் இருப்பதால் இவை தரமானது என நம்புகின்றனர்.
மத்திய அரசின் ஆய்வகம் அறிக்கை தரும்போது கடைகளில் விற்பனைக்கு இருக்கும் இந்த ரசாயன கலவை உணவுப் பொருட்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
இதை தயாரித்த நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். துணை போனவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். மக்களை பாதுகாக்க இந்த ரசாயன உணவு பொருட்களை தயாரித்த நிறுவனங்கள் எவை எவை என அறிவித்து, அதை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை மாவட்ட ஆட்சியர் முன் வர வேண்டும் என்பது எங்களது கோரிக்கை என்றனர்.
Leave a Reply