பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் பாட்டில்கள் அனுப்பிய இந்திய ரசிகர்

hania amir
Spread the love

சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப் பட்டதையடுத்து, பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்
களில் கவனம் ஈர்த்துள்ளார்.
பஹல்காம் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பாகிஸ்தானுடன் இருக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தும் முடிவு முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹனியா அமீர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, ஒரு இந்திய ரசிகர் தண்ணீர் போத்தல்களை அவருக்கு கூரியர் மூலம் அனுப்பிய வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், “சிறுவன் கொண்டு வந்த பார்சலில் ஹனியா அமீருக்காக தண்ணீர் உள்ளது” என்று ஒருவர் கூறும் காட்சி பரவி வருகிறது.
இந்த வீடியோ, சிந்து நதிநீர் விஷயத்தில் சமூக ஊடகங்களில் உருவான உணர்வுப்பூர்வமான விவாதங்களுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹனியா அமீர் இந்தியாவிலும் பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.