,

பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்
Spread the love

ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில்களையும் தரிசிக்க சிறப்பு பேருந்தை அமைச்சர் சிவசங்கர் இயக்கினார்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில், ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில்களையும் தரிசிக்கும் வகையில் சிறப்பு பேருந்தினை மக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர் களை சந்தித்த அவர் , “மக்களின் வரவேற்பை பொறுத்து ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில் களையும் தரிசிக்க இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் அவர்கள் தேவைக்கேற்ப பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். எந்த இடங்களில் பேருந்துகள் இயக்கம் தேவை என்று தெரிவித்தால் அவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.