தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மொத்தம் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.88% ஆக இருந்தது, மாணவர்கள் 91.74% தேர்ச்சி பெற்று மாணவிகளை விட குறைவாக உள்ளனர்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இணையதளங்களில் www.results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுடன், பிளஸ்–1 பொதுத்தேர்விலும் 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,07,098 பேர் தேர்வு எழுதியதில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்விலும் மாணவிகள் முன்னிலை வகிக்கின்றனர். மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 4,03,949 பேர் மாணவிகளும், 3,39,283 பேர் மாணவர்களும் ஆவார்கள்.
Leave a Reply