10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தப் பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 94 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களில் மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகளில், 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.
தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்..
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன. ,
கடந்த ஆண்டு 13 ஆம் இடத்தை பிடித்த கோவை மாவட்டம் இந்த ஆண்டு 93.49% பேர் தேர்ச்சி பெற்று 12 ஆம் இடத்தை பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 82.07% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Leave a Reply