பசுமை தமிழ்நாடு கொள்கைக்காக எச்.டி. எப்.சி. வங்கி சார்பில் மாபெரும் மரம் நடும் விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய 3 இடங்களில் மொத்தம் 75,000 மரக்கன்றுகளை நடுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
டிசம்பர் 16 -ந் தேதி கோவை எல்காட்டில் 10,000 மரங்கள் நடும் பணியுடன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த பசுமைப்பணிக்காக பார்ட்னராக ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் ஹோம் டு ஹோப் உடன் இணைந்து கோயம்புத்தூர் ரவுண்ட் டேபிள் ஸ்பார்க் 323 மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டியின் ரோட்டரி கிளப் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. 3 இடங்களில் பசுமைதோட்டம் கம்யூனிட்டி மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன், ஐபிஎஸ் பங்கேற்கிறார். கௌரவ விருந்தினராக தமிழ்நாடு, எஸ்.வி.பி., மாநில தலைவர் கேசவன் ரங்காச்சாரி, மற்றும் எல்காட், நிர்வாக அதிகாரி, தனலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர், ரோட்டேரியன் மணீஷ் வியாஸ், ஹெச்ஓஹெச், தலைவர் – பகுதி 7, பங்கஜ் பாய்யா, கோயம்புத்தூர் ரவுண்ட் டேபிள் ஸ்பார்க் 323, தலைவர் பாவுக் பைட், கோயம்புத்தூர் வட்ட 323, திட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல்ராஜ், என்.ஜி.ஓ. ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட பங்குதாரர் கௌசிக், உதவி ஆளுநர் ஆர்ஐடி 3201 வெங்கட், தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி, டாக்டர் ரோகினி ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply