சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மூத்த போலீஸ் அதிகாரி ‘இந்த கொலை வழக்கை விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். முந்தைய கொலை சம்பவத்துடன் இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது’ என தெரிவித்தார்.
மேலும், “கொலை வழக்கில், இதுவரை 8 நபர்களை சந்தேகத்துடன் நாங்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதற்கட்ட விசாரணை. இந்த கொலை வழக்கை விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.
மேலும் பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூகவிரோத கும்பல்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோத கூலிப்படை கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்துள்ளார்கள். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Leave a Reply