நேஷனல் மாடல் பள்ளியில் சி.பி.எஸ்.சி பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிலரங்கம் கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை துவங்குகிறது.
இதுகுறித்து நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் டாக்டர் கீதா செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி கலையரங்கத்தில், சி.பி.எஸ்.சிபயிற்சியாளர்களுக் கான பயிற்சி சான்றிதழ் படிப்பு 2 நாட்கள் நடைபெறுகிறது. சிபிஎஸ்சி, ஐ.எஸ். டி.எம் -ஆல் இணைந்து இந்த பயிற்சியை வழங்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து சிபிஎஸ்சி ஆல் நிதியுதவி செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. தேசிய கல்விக் கொள்கை பரிந்துரையின்படி இந்த பயிற்சி சிபிஎஸ்சி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை சேர்ந்த சிபிஎஸ்சி பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகிய 70 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சுமார் 50 மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
சிபிஎஸ்இ இன் அறிவிப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மெய்நிகர் உரையாடலில் கலந்துகொண்டு பயிற்சியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த பயிற்சி வகுப்பில் எவ்வாறு மாணவர்களுக்கு பாடங்களை சிறந்த முறையில் பயிற்றுவிப்பது என்பது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.
Leave a Reply