, , , ,

நேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த பேராசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது 2024

Nehru Colleges
Spread the love

நேரு கல்விக் குழுமத்தின் சார்பாக சிறந்த சிறந்த பேராசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது நிகழ்ச்சி 16-ஆது முறையாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது ஆண்டு தோறும் சிறப்பாக முறையில் வழங்கப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலரும் வழக்கறிஞர் மற்றும் மொரிஷியஸின் கௌரவ வர்த்தக ஆணையர் – இந்தியா, முனைவர் பி. கிருஷ்ணதாஸ் தலைமை பெறுப்பேற்று விழாவை தொடங்கி வைத்தார். நேரு கல்விக் குழுமத்தின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி முனைவர் பி. கிருஷ்ணகுமார் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர். கே. சொக்கலிங்கம் கலந்து கொண்டு சிறப்பான உரையை நல்கினார். மேலும் நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் ஹெச்.என். நாகராஜா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. அனிருதன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 10 முதுநிலைப் பேராசிரியர்கள், 8 இளநிலைப் பேராசிரியர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது பாரதியார் பல்கலைக்கழகம், டாக்டர். என். பொன்பாண்டியன், ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்டடிஸ் டாக்டர் கே. மாறன், அழகப்பா பல்கலைக்கழக வீரா ரவி ஆகிய மூன்று பேருக்கும் விருது வழங்கி கொளவரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியாக துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எ. சுவர்ணலதா நன்றி கூறினார்.